Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலாஷ் யாத்திரை சென்ற தமிழர் திடீர் மரணம்:

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (11:32 IST)
கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் கைலாஷ் யாத்திரயில் நாடு முழுவதிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் கனமழை காரணமாக கைலாஷ் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் பலர் நேபாள நாட்டில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் திடிரென மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்தவர் ஆண்டிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்றும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்தார் என்றும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ராமச்சந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருடைய  உறவினர்கள் தமிழக கோரிக்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments