Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து குறிப்பிடவில்லை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (11:02 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் கால அவகாசம் அளிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களில் அமைக்கவில்லை

இதனால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை கடந்த வெள்ளியன்று தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த மனு தற்போது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏப்ரல் 7ஆம் தேதி இந்த மனுவை விசாரணை செய்யவிருப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

மேலும் காவிரி வழக்கின் தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலாண்மை வாரியம் குறித்து குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு காவிரி விவகாரம் ஒரு பெரிய பிரச்சினை தான் என்றும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதியின் இந்த கருத்தால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments