திருமலை கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு.. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:04 IST)
கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் நான்கு மாட வீதிகளில் தேர் வலம் வந்தது என்பதையும் பார்த்தோம். 
 
பிரம்மோற்சவத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்தனர் என்பதும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவடைகிறது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
பிரமோற்சவம் முடிவடைந்ததை அடுத்து கோவில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருமலையில் திருக்குளத்தை சுற்றியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
 
தீர்த்தவாரிக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments