Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்மழை எதிரொலி.. இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:00 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் இதனால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதை அடுத்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
வேலூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அதேபோல் கல்லூரிகளும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments