Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்மழை எதிரொலி.. இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:00 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் இதனால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதை அடுத்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
வேலூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அதேபோல் கல்லூரிகளும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments