Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்மழை எதிரொலி.. இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:00 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் இதனால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதை அடுத்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
வேலூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அதேபோல் கல்லூரிகளும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments