Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்று: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (15:53 IST)
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையேல் கொரோனா வைரஸ் தங்களுக்கு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போது தான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்ததாக சற்றுமுன் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தடுப்பூசி சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல என்றும் இணையதளத்தில் தவறுதலாக அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது
 
இதனையடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கொரோனா வைரஸ் தடுப்பூசி சான்றோ அல்லது நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments