Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுதான் கடைசி முயற்சி.! போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புக.! மருத்துவர்களுடன் மம்தா பேச்சுவார்த்தை..!!

Mamtha

Senthil Velan

, சனி, 14 செப்டம்பர் 2024 (15:57 IST)
கொல்கத்தாவில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை நேரில் சந்தித்து உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். 
 
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு மேற்குவங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அண்மையில் மம்தா பானர்ஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பேச்சுவார்த்தையை மருத்துவர்கள் குழு புறக்கணித்தது. இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார். போராட்டம் நடத்திய மருத்துவர்களை சமாதானப்படுத்த தான் மேற்கொண்ட கடைசி முயற்சி இது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

 
முதல்வரின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். இருப்பினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கட்சி வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதி!