Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலை குழந்தைகளை, சிறுவர் - சிறுமிகளை குறி வைக்குமா?

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (07:29 IST)
கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பையும், அதிக பலியையும் ஏற்படுத்தி உள்ளது. 2வது அலையே இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் 3வது அலையை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. 
 
ஆனால், இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என எய்ம்ஸ் இயக்குநர் இது குறித்த அச்சத்தை போக்கியுள்ளார். 
 
இதேபோல மத்திய சுகாதார அமைச்சகமும் 3வது அலையில் கடுமையாக பாதிக்கப்படப் போவது சிறுவர்களும், குழந்தைகளும்தான் என்கின்றன தகவல்களை நம்ப வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments