Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பப்ஜி விளையாட்டின்போது சார்ஜ் தீர்ந்துபோன ஆத்திரத்தில் கத்தியால் குத்திய இளைஞர்!

பப்ஜி விளையாட்டின்போது சார்ஜ் தீர்ந்துபோன ஆத்திரத்தில் கத்தியால் குத்திய இளைஞர்!
, சனி, 16 பிப்ரவரி 2019 (12:32 IST)
பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது சார்ஜ் தீர்ந்து போன்ற ஆத்திரத்தில் தன்  சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட நபரை கத்தியால் குத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
இரவு பகலென எல்லா நேரங்களிலும் பப்ஜி விளையாட்டை இணையத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் மனதளவில் அடிமையாக்கி விடுகிறது. 
 
மேலும்  இந்த விளையாட்டின் வீரியத்தால் பல வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
 
அந்தவகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த ரஜினிஷ் ராஜ்பார் என்பவர் பப்ஜி கேம் விளையாடும் போது செல்போனின் சார்ஜ் முற்றிலும் தீர்ந்துள்ளது. பிறகு அவரச அவசரமாக சார்ஜரை தேடியுள்ளார் ரஜினிஷ். ஆனால் அவரது சார்ஜரின் வயர் அறுந்துகிடந்துள்ளதை பார்த்து ஆத்திரமடைந்த ரஜினிஷ்  தனது சகோதரி தான் இந்த வேலையை செய்திருக்கக்கூடும் என சந்தேகம் அடைந்து கத்தியால் ஓமின் வயிற்றில் குத்தியுள்ளார். 
 
கத்திக்குத்தில் காயமடைந்த ஓம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதிய இந்த சம்பவத்தால் ரஜினிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

webdunia

 
பப்ஜி விளையாட்டின் மீதுள்ள மோகத்தால்  தான் என்ன செய்கிறேன் என்றுகூட தெரியாத அளவுக்கு ஒருவரை மனதளவில் மாற்றிவிடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை: முதலமைச்சர் அதிரடி உத்தரவு!!