Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி!

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (17:16 IST)
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில்  உள்ள விரார் பாலிவாலி கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி  கொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
 
இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் இம்ரான் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்து இதுபற்றி போலீஸார் விசாரித்து வந்தனர்.
 
இந்த கொலை வழக்கில், நாலாச்சோப்ரா பெல்கார் பகுதியைச் சேர்ந்த பரன் சாவ்  வயது(50) என்பவருக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவரை விசாரித்தபோது, இம்ரானின் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த இம்ரான் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் ஆத்திரமடைந்து இம்ரானை கொலை செய்ய திட்டமிட்டு, இதற்காக, தனது நண்பர்கள் அப்துல் முபாரக் அலி பத்தா ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர்.
 
பின்னர், சம்பவ தினத்தன்று, இம்ரானை கடத்திச் சென்று, கொலை செய்துவிட்டு, உடலை விராட் பாலிவாலி கிராமத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கொலை நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 3 பேர் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments