Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு…. புன்னகைக்கான தூதரான சச்சின் டெண்டுல்கர்

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு…. புன்னகைக்கான தூதரான சச்சின் டெண்டுல்கர்
, செவ்வாய், 30 மே 2023 (17:04 IST)
மராட்டிய மாநிலத்தில் ஸ்வச் முக் அபியன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், புன்னகைக்கான தூதராக கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

மராட்டிய மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா(எதிர்ப்பு அணி)- பாஜக கூட்டணி    ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்கு, ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.

இதில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவைச் சேர்ந்த துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் முன்னிலையில் மராட்டிய அரசு ஒப்பந்தம்  போட்டுள்ளது.

‘’இந்த  ஒப்பந்தத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மருத்துவக் கல்விமுறை இணைந்து கையெழுத்திட்டன. எனவே, புன்னகைப்பது, சுவைப்பது உள்ளிட்ட விசயங்களுக்கான வாய்வழி சுதாரங்களை ஊக்குவிக்கும் வகையில் தூதராக சச்சின் டெண்டுல்கர்  அடுத்த  ஆண்டுகள் செயல்படுவார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணைமுதல்வர் பட்னாவிஸ், ‘’அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதற்கான தூதராக இருப்பார் என்றும் இதன் மூலம் இளைஞர்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து ஒப்புக்கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிக் கோப்பையுடன் சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்கள்