Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனை பால்கனியில் இருந்து கீழே தள்ளிவிட்ட ஆசிரியர்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (22:58 IST)
கர்நாடக மாநிலத்தில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் பால்கனியில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மா நிலம் ஹாக்லி கிராமத்தில்  ஓரு அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாரத். இந்த வகுப்பின் ஆசிரியர் முத்தப்பா. இவர், இன்று திடீரென்று பாரத்தை மண்வெட்டியால் தாக்கியதுடன்,
அவரை பால்கனியில் இருந்து கீழே தள்ளிவவிட்டார்.

இதில், பலத்த காயம் அடைந்த மாணவர் பாரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், பாரத்தின் தாயும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்யும்  நிலையில், அவரையும் ஆசிரியர் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியர் தற்போது தலைமறைவாகியுள்ளதால், அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments