Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கு வழியே எலுமிச்சை சாறு செலுத்திய ஆசிரியர்: வதந்தியை நம்பி பரிதாப பலி:

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (10:06 IST)
மூக்கு வழியே எலுமிச்சை சாறை செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்று வதந்தியை நம்பி ஆசிரியர் ஒருவர் மூக்கு வழியே ஆக்சிஜனை செலுத்தி பரிதாபமாக பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 44 வயது ஆசிரியர் பசவராஜ். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்கள் மூலம் மூக்கு வழியில் எலுமிச்சை சாறு செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்பதை படித்துள்ளார். இதனை தனக்கு செய்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து மூக்கு வழியை எலுமிச்சை சாறை செலுத்தியுள்ளார்
 
உடனடியாக அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்
 
சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்தியை நம்பி மூக்கு வழியே ஆக்சிஜனை செலுத்தி ஆசிரியர் பசவராஜா பலியானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முன்னாள் பாஜக எம்பி ஒருவர் மூக்கு வழியே எலுமிச்சை சாறை செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments