Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்த தாயின் உடலை 5 கிமீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன் : பதறவைக்கும் சம்பவம்

இறந்த தாயின் உடலை 5 கிமீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன் : பதறவைக்கும் சம்பவம்
, வியாழன், 17 ஜனவரி 2019 (16:01 IST)
ஒடிஷாவில் உள்ள கர்பாபகல் கிராமத்தை சேர்ந்த ஜானகி என்ற பெண்  (45) தன் மகன் சரோஜ்(17) என்பவருடன் வசித்து வந்தார். கணவர் இறந்து விட்டதால் அருகில் கூலி வேலைக்குச் சென்று வந்தார். 
இந்நிலையில் நேறறு கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றவர் அங்கே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தாயின் இறுதி சடங்கிற்கு சரோஜ் முயற்சி செய்தார். அருகில் வசிப்போரிடம் உதவி கேட்டார் ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. அதாவது அவர் தாழ்ந்த சாதி என்று கருதி யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை.
 
இதனையடுத்து சரோஜ் ஒரு முடிவெடுத்தார் தன் அம்மாவின் உடலை சைக்கிளில் கட்டி பின்னால் வைத்தார். தாய்ன் உடல் கீழே சரியாத வண்ணம் சைக்கிளில் இருபக்கமும் கம்புகளை பொருத்தியபடி 5 கிமீ நடந்தே கொண்டு சென்று தன் தாயின் உடலை காட்டுக்குள் அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பியர் பாட்டிலில் விநாயகர் படம் இடம்பெற்றதா? - உண்மை என்ன?