Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கு போகச் சொன்ன தந்தையை கொலை செய்த மகன்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (15:16 IST)
மஹாராஷ்டிராவில் வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கொலை செய்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த தர்மா திண்டா விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் திண்டா. பட்டதாரியான இவர்  நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.  இதனால் தனது தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.
 
விவசாயத்தில் லாபம் இல்லாததால் குடும்பம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. சுரேஷ் திண்டாவை வேலைக்கு போகுமாறு அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் சுரேஷ் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு இருக்கிறான். தந்தையின் வற்புறுத்தலை பொறுக்க முடியாத சுரேஷ், அவரை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோடாரியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே தர்மா திண்டா உயிரிழந்தார்.
 
சுரேஷ் திண்டாவை கைது செய்துள்ள போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments