Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா : உரிமையாளர் கைதால் பரபரப்பு

ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா : உரிமையாளர் கைதால் பரபரப்பு
, புதன், 29 மே 2019 (19:23 IST)
உத்தராகண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு ஹோட்டலில் சுற்றுலாவுக்கு வந்த தம்பதியர் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.அப்போது அறையில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் ஹோட்டல் வரவேற்பாளரிடம் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
பின்னர் இதுகுறித்து அந்த தம்பதியினர்  போலீஸில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

மேலும் ஹோட்டல் அறையில் இருந்த மின்விசிறி, கேமரா, உரிமையாளரின் செல்போன், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஹோட்டலில் ரகசிய கேமரா வைத்திருந்ததாக வெளியான செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?