Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழுத குழந்தையை...ஆத்திரத்தில் தீயிட்டுக் கொளுத்த தாய்...

Advertiesment
crying child
, திங்கள், 28 டிசம்பர் 2020 (21:33 IST)
இடைவிடாமல் அழுதுகொண்டிருந்த 5 மாதக் குழந்தையை  பெற்ற தாயே ஈவு இரக்கமின்றி தீயீலிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வருபவர் குட்டி சிங் கோந்த். இப்பெண்ணிற்கு கடந்த வருடம் திருமணமான நிலையில் ஐந்து மாதக் கைக் குழந்தையுள்ளது.

இந்நிலையில், குட்டி சிங் கோந்த் கடந்த சில மாதங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இச்சம்பபம் நடந்த அன்று, குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் கடும் கோபமடைந்த குட்டி சிங் கோந்த், அடுகேயுள்ள பகுதிக்குக் குழந்தையைக் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.

பின்னர், மாமியார் வந்து குழந்தை எங்கே எனக் கேட்டபோது, இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குட்டி சிங் கோந்த்.அழைத்துச் என்று  மருத்துவமனையில் சேர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் அரசியலில் ஒரு ஜீரோ – முதல்வர் பழனிசாமி கடும் தாக்கு !!!