Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உன்னாவ் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் படுதோல்வி!

உன்னாவ் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் படுதோல்வி!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (07:30 IST)
உன்னாவ் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் படுதோல்வி!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் படுதோல்வி அடைந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு வெறும் 1555 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் வேட்பாளர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து உன்னாவ் பாலியல் வன்முறை சம்பவத்தை மக்கள் தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை என்பதே தேர்தல் முடிவு காட்டிவிட்டது என்று கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் முடிந்த பின்னரும் மாறாத பெட்ரோல் விலை: என்ன காரணம்?