Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலுவலகத்தின் கதவைப் பூட்டிக்கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்(வைரல் வீடியோ)

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (12:43 IST)
மத்திய பிரதேச்த்தில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கதவைப் பூட்டிவிட்டு நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்களில் மக்கள் தங்களின் வேலைக்காக அலைக்கழிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும் வேளையில் மத்திய பிரதேச அரசு அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் என்ற இடத்தில் குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் நபருக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனைக் கொண்டாடுவதற்காக, ஊழியர்கள் பணிநேரத்தின் போது, அலுவலக கதவை பூட்டி விட்டு நடனமாடியுள்ளனர்.

ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் நடமாடும் வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய பிரதேச குழந்தைகள் நல உயர் அதிகாரி, பணி நேரத்தில் நடனமாடிய அனைத்து ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


நன்றி; RAJ NEWS Telugu

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments