Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
, புதன், 4 ஏப்ரல் 2018 (08:15 IST)
ஸ்டெர்லைட் ஆலை, ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 
 
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. 
 
இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 52-வது  நாளாக தொடருகிறது. 
webdunia
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாப் பாடகிகளின் நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம்!