Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பு கொடுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கும்பல்

துப்பு கொடுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கும்பல்
, வெள்ளி, 8 டிசம்பர் 2017 (17:00 IST)
டெல்லியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து துப்பு கொடுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள நரேலா குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன்(43). அவர் குடியிருக்கும் பகுதி அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து பலமுறை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு டெல்லி பெண்கள் கமிஷனரிடம் இது குறித்து பிரவீன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் டெல்லி பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்வாதி மலிவால் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தியதில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் 350 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஆஷா மற்றும் ராகேஷ் தம்பதி மீது வழக்கும் போடப்பட்டது. புகார் கொடுத்ததற்கு பழி வாங்கும் பொருட்டு ஆஷா, வீட்டில் இருந்து வெளியே வந்த பிரவீனைநிர்வாணப்படுத்தியதோடு இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கி உள்ளார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஷாவை நேரில் சந்தித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இதில் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேகர் ரெட்டி டைரி குறிப்புகள் லீக் ; பிரச்சாரத்தை ரத்து செய்த ஓபிஎஸ் : பின்னணி என்ன?