Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி.... சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி.... சுகாதாரத்துறை அமைச்சர்  விளக்கம்
, திங்கள், 29 நவம்பர் 2021 (18:34 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து  பெங்களூரு திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 63 வயதுடைய நபரின் மாதிரிகள் வேறாக உள்ளது. அதை ஐசிஎம் ஆருக்கு அனுப்பட்டுள்ளது.

 இதைப்பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்!