Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உப்பு அதிகமானதால் சமையல்காரர் படுகொலை!

Advertiesment
தபா உரிமையாளர்கள் கைது
, சனி, 10 டிசம்பர் 2022 (21:44 IST)
மராட்டியத்தில் உணவில் உப்பு அதிகமானதால் சமையல்காரரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஸ்டிர மாநிலம் புனே நகரில் சகான் ஷிப்ராப்பூரில் உள்ள தபா ஒன்றில் சமையல் காரராகப் பணியாற்றி வந்த சமையல் காரர் பிரசன் ஜீத்(35).

இவர் அந்த தபாவில் 2  நாட்களுக்குப் பின் பபணியாற்றிக் கொண்டிருக்கும்போது, சமையலில் உப்பு அதிகம் போட்டு சமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரை உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க முயன்றபோது, ஒரு தொழிலாளி அதைப் பார்த்து சமூக ஆர்வலரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த  நிலையில், போலீஸார் இதுகுறித்து விசாரித்து, தபா உரிமையாளர்களான ஓம்கார் கேந்திரே(21), மற்றும் அவரது சகோதரர்  கைலாஸ்(19) ஆகிய இருவரையும் கைது செய்த் விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?