Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து பள்ளத்தில் விழாமல் இருந்திருந்தால் அனைவரும் செத்துருப்போம்.. ஜம்மு காஷ்மீர் விபத்து குறித்து பக்தர்..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (13:14 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் பலியாகினார். இந்த சம்பவத்தின் போது பேருந்து பள்ளத்தில் விழுந்தது என்பதும் இதனால் பல படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து தப்பித்த ஒரு பக்தர் கூறிய போது ’பயங்கரவாதிகள் துப்பாக்கியில் சுட்டபோது எதிர்பாராத விதமாக பேருந்து பள்ளத்தில் விழுந்தது. ஒரு மரத்துக்கும் பாறைக்கும் நடுவே பேருந்து சிக்கிக் கொண்டதால் தான் பலர் உயிர் தப்பித்தோம் .
 
பேருந்து மட்டும் பள்ளத்தில் விழாமல் இருந்திருந்தால் பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்த அனைவரையும் சுட்டுக் கொன்று இருப்பார்கள். பேருந்து பள்ளத்தில் விழுந்து எல்லோரும் கூச்சலிட்டபோது கூட பயங்கரவாதிகள் பேருந்தை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தனர்.
 
அனைவரும் கூச்சல் இடுவதை நிறுத்திய பிறகு அவர்கள் நாங்கள் அனைவரும் செத்து விட்டோம் என்று எண்ணி சுடுவதை நிறுத்தினார்கள் என்று பேருந்தில் பயணம் செய்த பக்தர் ஒருவர் கூறியுள்ளார்.
 
இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்பதும் 33 பேர் காயம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments