Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை வீட்டிற்கு அனுப்பாத மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகன்..!

Mahendran
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (12:52 IST)
நான்கு ஆண்டுகளாக மனைவியை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை அவரது மருமகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் நாசையா என்பவரது மகள் ஸ்வப்னா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்னர் ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்வப்னா ஆகிய இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்ததை அடுத்து ஸ்வப்னா தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திரும்பி விட்டார்.
 
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்வப்னாவை கண்டு ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், தனது மாமனாரிடம் சென்று தனது மனைவியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாமனார் மறுக்கவே ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அவரை கட்டையால் அடித்தார்.
 
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மாமனார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments