மனைவியை வீட்டிற்கு அனுப்பாத மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகன்..!

Mahendran
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (12:52 IST)
நான்கு ஆண்டுகளாக மனைவியை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை அவரது மருமகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் நாசையா என்பவரது மகள் ஸ்வப்னா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்னர் ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்வப்னா ஆகிய இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்ததை அடுத்து ஸ்வப்னா தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திரும்பி விட்டார்.
 
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்வப்னாவை கண்டு ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், தனது மாமனாரிடம் சென்று தனது மனைவியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாமனார் மறுக்கவே ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அவரை கட்டையால் அடித்தார்.
 
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மாமனார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments