Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.1 கோடி செலவு செய்து மாமனாரை கொலை செய்த மருமகள்: சிக்கியது எப்படி?

ரூ.1 கோடி செலவு செய்து மாமனாரை கொலை செய்த மருமகள்: சிக்கியது எப்படி?

Siva

, வியாழன், 13 ஜூன் 2024 (11:38 IST)
ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மாமனாரை கொலை செய்த மருமகள் குறித்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 82 வயது புருஷோத்தமன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதனை முதலில் போலீசார் வழக்கமான விபத்தாக பதிவு செய்த நிலையில் அதன் பிறகு விசாரித்தபோது புருஷோத்தமன் கொலை செய்யப்படும் நோக்கத்துடன் கார் விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இந்த  கொலையில் புருஷோத்தமன் மருமகள் அர்ச்சனாவுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.  இதனை அடுத்து முதலில் கார் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்த நிலையில் அவரிடம் விசாரணை செய்தபோது தான் இந்த கொலைக்கு மூளையாக இருந்தது அர்ச்சனா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புருஷோத்தமனுக்கு 300 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகவும் இந்த சொத்தில் தனது பங்கை பிரித்து கொடுக்கும்படி அர்ச்சனா கேட்டபோது புருஷோத்தமன் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் இதனை அடுத்து ஒரு கோடி ரூபாய் செலவு செய்து விபத்து போன்று செட்டப் செய்து புருஷோத்தமனை அர்ச்சனா கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அர்ச்சனாவை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டதை அடுத்து அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!