Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 7 - கொரோனா சேப்டர் க்ளோஸ்: அடித்து சொல்லும் கேசிஆர்!!

ஏப்ரல் 7 - கொரோனா சேப்டர் க்ளோஸ்: அடித்து சொல்லும் கேசிஆர்!!
, திங்கள், 30 மார்ச் 2020 (09:43 IST)
ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பேசியுள்ளார். 
 
உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
இந்நிலையில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுள்ள தெலங்கானா மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு வராமல் இருந்தால் ஏபரல் 7ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் பலியை ஏற்படுத்த போகிறது. கொரோனா தாக்குதலிலிருந்து மீள ஜூன் 1 ஆம் தேதி வரை ஆகும் என டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில்  சந்திரசேகரராவ் இவ்வாறு தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலம்பெயரும் தொழிலாளர்கள்: மாநில எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவு