Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் பரிசோதனை கருவியை உருவாக்கிய மறுநாள் குழந்தை பிரசவித்த இந்தியப் பெண்

கொரோனா வைரஸ் பரிசோதனை கருவியை உருவாக்கிய மறுநாள் குழந்தை பிரசவித்த இந்தியப் பெண்
, ஞாயிறு, 29 மார்ச் 2020 (18:18 IST)
bbc

கொரோனா பாதிப்பால் கடுமையாக போராடிவரும் உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் சரியான முறையில் விரைவாக மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.

இந்நிலையில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு சரியான முறையில் உபகரணங்கள் கிடைத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் வைராலஜிஸ்ட் ஒருவர் தனது குழந்தையை பெற்றேடுக்கும் சில மணி நேரத்துக்கு முன்பு, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்களை கண்டுபிடித்தார்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனைக் கருவி முதல் முறையாக, கடந்த வாரம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதனால் நோய் தொற்றை விரைவாக கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவர்களிடையே நிலவுகிறது. மேலும் இந்த கருவி கொரோனா பாதிப்பை முழுமையாக முறியடிக்க உதவும் என்றும் மருத்துவ குழுவினர் நம்புகின்றனர்.
புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரி என்ற பரிசோதனை நிறுவனம் சோதனை கருவிகளை தயாரிக்கவும் விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம்.

தற்போது இந்த நிறுவனம் புனே, டெல்லி, மும்பை, கோவா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சுமார் 150 பரிசோதனை கருவிகளை அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவின் மற்ற இடங்களுக்கும் புதிதாக தயாரிக்கப்படும் பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்படும் என அந்நிறுவனத்தின் இயக்குநர் கவுதம் பிபிசியிடம் தெரிவித்தார்.
 

 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்த ஊருக்கு 200 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி வழியிலேயே மரணம்: அதிர்ச்சி தகவல்