Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.. குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் உடல்கள்..!

Mahendran
சனி, 1 மார்ச் 2025 (10:20 IST)
தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரையும் அமெரிக்கா மீட்பு படையினர் கடுமையாக போராடிய நிலையில், தற்போது எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் குடிநீர் கால்வாய் அமைக்கப்படுவதற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுரங்கப் பாதைக்குள் எட்டு பேர் சிக்கிக்கொண்டனர்.
 
இதனை அடுத்து மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியை மேற்கொண்டு வந்தனர். இந்த செயல்பாட்டில், 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற மூன்று பேரும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
 
இந்நிலையில், மூன்று பேரும் இயந்திரத்தின் அடியில் சிக்கியதன் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குப் பிறகு, எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், மீதமுள்ள ஆறு பேர் தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்.. தமிழில் வாழ்த்து கடிதம் எழுதிய ஆளுனர் ரவி..!

2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைக்க உறுதியேற்போம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments