Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலே தோத்துடும்?; தெலுங்கானாவில் பிரம்மாண்ட கோவில்! – ரூ.1,200 கோடி ஒதுக்கீடு!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (13:27 IST)
தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணியில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஆந்திராவிலிருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது திருப்பதி திருக்கோவில் ஆந்திராவின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான கோவிலை கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டார்.

இதற்காக தெலுங்கானாவில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்மர் குடைவரை கோவிலை புனரமைக்க தெலுங்கானா அரசு முடிவெடுத்தது. இதற்காக ரூ.1,200 கோடி செலவில் கோவில் புனரமைப்பு மற்றும் பிரம்மாண்டமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மலையின் ஒரு பகுதியில் கோவில் நகரம் அமைக்கவும், அங்கு மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2019 இறுதிக்குள் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக கட்டுமான பணிகள் காலதாமதமாகியது. தற்போது கோவில் கட்டுமானம், கோவில் நகரம் அமைக்கும் பணிகளில் 80% முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

பொன்முடி பதவி பறிப்பு.. பதறியடித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்..!

பொன்முடியை அடுத்து திருச்சி சிவா பதவியும் பறிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments