Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காந்திக்கு அடுத்த ஹீரோ ’அவர்கள் ’ தான்... தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேச்சு

காந்திக்கு அடுத்த ஹீரோ ’அவர்கள் ’ தான்... தெலுங்கானா கவர்னர் தமிழிசை  பேச்சு
, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (16:55 IST)
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜக கட்சி தலைமை சமீபத்தில் அவரை தெலுங்கான மாநில கவர்னராக தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதி முன்பு பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் கொண்டாடப்படும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அவர் வாழ்த்துக்கள்  தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நவராத்திரி தின விழா சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இவ்விழா கொண்டாடபடுகிறது. மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்பட்டும் இந்த விழா அம்மாநிலத்தில் வெகு பிரசித்தம். எனவே நேற்று தெலுங்கானா மாநில  ராஜ்பவனின் பட்டுகமா விழா கொண்டாடப்பட்டது. இதில் அம்மாநில கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு, அங்கிருந்த பெண்களுடன் நடனம் ஆடினார். அதன்பின்னர் இவ்விழா குறித்து அவர் மேடையில் பேசினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு அவர், தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், அனைவருக்கும், ஆயுதபூஜை பல வெற்றிகளை குவிக்கும் திருநாளாக அமைய  வேண்டும் என்று தெரிவிதுள்ளார்.
 
மேலும், மகாத்மா காந்திக்கு அடுத்த ஹீரோ மாணவர்கள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைது.. ரெட்டியின் அதிரடி நடவடிக்கை