Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

Siva
ஞாயிறு, 6 ஜூலை 2025 (11:37 IST)
தெலங்கானா அரசு, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மணிநேரம் வரையிலும், வாரத்திற்கு 48 மணிநேரம் வரையிலும் வேலை செய்ய அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியான உத்தரவில், தினசரி வேலை நேரம் 10 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்றும், வாராந்திர வரம்பு 48 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புகளுக்கு மேல் செய்யப்படும் வேலைக்கு ஓவர் டைம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
 
மேலும், ஒரு நாளைக்கு ஆறு மணிநேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 30 நிமிட இடைவெளி வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் மொத்த வேலை மற்றும் ஓய்வு நேரம் 24 மணிநேரத்தில் 12 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
 
ஊழியர்கள் வாரத்திற்கு வழக்கமான 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யலாம், ஆனால் ஒரு காலாண்டில் அதிகபட்சமாக 144 மணிநேரம் மட்டுமே ஓவர் டைம் வேலை செய்ய முடியும். கூடுதல் நேரம் வேலை செய்ததற்கு அவர்களுக்கு ஓவர் டைம் ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments