Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் உயிரை வாங்கிய எலெக்ட்ரிக் பைக்! பற்றி எரிந்த ஷோ ரூம்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (08:53 IST)
தெலங்கானாவில் எலெக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் செகந்திராபாத் பகுதியில் ரயில் நிலையம் அருகே எலெக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல இரவு கடை மூடப்பட்டுள்ளது. கடைக்கும் மேல் உள்ள தளங்களில் சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென ஷோ ரூமில் தீப்பற்றியுள்ளது. இதையறிந்த மக்கள் சிலர் தப்பி செல்ல முயன்றும் வழி இல்லாததால் தீ மேல்தளத்திற்கும் பரவியுள்ளது. இதனிடையே தீ பற்றிய விவகாரம் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

ALSO READ: எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி: மத்திய அரசு திட்டம்!

எனினும் அதற்குள் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பைக் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பல இடங்களில் மின்சார பைக்குகள் திடீரென தீப்பற்றிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று ஷோ ரூமே பற்றி எரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments