Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஜி அமைச்சர்கள் வீட்டில் அதிரடி ரெய்டு! காரணம் என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (08:34 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர், லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று காலையே முன்னாள் அதிமுக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதாக அவர் மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ALSO READ: கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தின் 2 தாலுகாக்களில் பள்ளிகள் விடுமுறை!

அதுபோல எஸ்.பி.வேலுமணி ஊரக வட்டார வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி வரை இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments