Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலுங்கானாவில் மேகவெடிப்பு; வெளிநாட்டு சதியா? – முதல்வர் சந்தேகம்!

Advertiesment
Telangana CM
, செவ்வாய், 19 ஜூலை 2022 (11:20 IST)
தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மேகவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு சதி உள்ளதா என தெலுங்கானா முதல்வர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த சில வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பத்ராசலம் என்ற பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் ஊரே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தால் அப்பகுதி 70 அடி நீரில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து பேசியுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் “இந்த மேகவெடிப்பு என்பது புதிய நிகழ்வாக உள்ளது. இதற்கு முன்னர் காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் நடந்தது. இப்போது தெலுங்கானாவில் நடந்திருக்கிறது. இது வெளிநாடுகளின் சதியாக இருக்கலாம் என்றும் எங்களுக்கு செய்தி வருகிறது. இதில் எது உண்மையென்று தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாத்துக்கும் வரி போட்டா என்ன ஆகுறது..? – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!