Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (14:10 IST)
ரமலான் மாதத்தை ஒட்டி அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரம் குறைக்கப்படுவதாக தெலுங்கானா மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
ரமலான் பண்டிகை இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மார்ச் 2 முதல் 31-ஆம் தேதி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து தொழுகை செய்வார்கள்.
 
 இந்த நிலையில் தெலுங்கானா அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பணியாளர்கள் மார்ச் 2 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மாலை 4 மணிக்கு வீட்டுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் இஸ்லாமிய ஊழியர்கள் பணியை தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments