Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா சட்டசபை கலைப்பு

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (15:23 IST)
தெலங்கானா சட்டசபையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபையை கலைப்பது தொடர்பாக கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
 
மாநில பிரச்னை காரணமாக தெலுங்கானா சட்டசபையை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை முதல்வர் சந்திர சேகர ராவ், கவர்னர் நரசிம்மனிடம் நேரில் அளித்துள்ளார். இதனை ஏற்று கொண்ட கவர்னர், புது அரசு அமையும் வரை காபந்து அரசாக நீடிக்குமாறு சந்திரசேகர ராவிடம் கேட்டு கொண்டார்.
 
தற்போது நடைபெற்று வரும் சந்திர சேகர ராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சியின் பதவி காலம் 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்துள்ளார். மாநில பிரச்னையை முன்வைத்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
 
தெலங்கானா அரசை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments