Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா சட்டசபை கலைப்பு

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (15:23 IST)
தெலங்கானா சட்டசபையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபையை கலைப்பது தொடர்பாக கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
 
மாநில பிரச்னை காரணமாக தெலுங்கானா சட்டசபையை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை முதல்வர் சந்திர சேகர ராவ், கவர்னர் நரசிம்மனிடம் நேரில் அளித்துள்ளார். இதனை ஏற்று கொண்ட கவர்னர், புது அரசு அமையும் வரை காபந்து அரசாக நீடிக்குமாறு சந்திரசேகர ராவிடம் கேட்டு கொண்டார்.
 
தற்போது நடைபெற்று வரும் சந்திர சேகர ராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சியின் பதவி காலம் 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்துள்ளார். மாநில பிரச்னையை முன்வைத்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
 
தெலங்கானா அரசை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments