Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது - அரசின் அதிரடி ஆணை

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:48 IST)
இந்தோனேஷியாவில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் அச்சே என்ற மாகாணத்த்தில் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை போலவே, அங்கும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
உறவினரில்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது என்ற நடைமுறைகள் எல்லாம் ஏற்கனவே அமலில் உள்ளது.
 
இந்நிலையில் தற்பொழுது புதிதாக ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட பலர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அது என்னவென்றால் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்பது தான். இதனை மீறுபவர்கள் கடுமையான தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments