Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கானா: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி

தெலுங்கானா: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி
, செவ்வாய், 29 மே 2018 (15:48 IST)
தெலுங்கானா மாநிலம் கரீம் நகருக்கு சென்று கொண்டிருந்து அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 
 
தெலுங்கானாவில் உள்ள வராங்கல் வாவட்டத்தில் இருந்து கரீம் நகருக்கு அரசு பேருந்து ஒன்று நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து செங்கர்லா என்ற பகுதிக்கு அருகில் செல்லும் போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதியது.
 
இந்த கோர விபத்தில் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது. இதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
webdunia
 
இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு சிறப்பான மருத்துவ உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இரும்புத்திரை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட்” - விஷால்