Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை ஊசி போட்டு இளம்பெண் கற்பழிப்பு - அதிரவைக்கும் சம்பவம்

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (16:43 IST)
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் (19)ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் காணமல் போனார்.பின்னர் இளம்பெண்ணின் பெற்றோர் போலீஸிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழகுபொ பதவு செய்து காணாமல் போன பெண்ணின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துவந்தனர்.
 
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நிஷூகுப்தா (20) என்ற வாலிபருடன் அவர் வெளியில் சுற்றிவந்ததாகத் தெரிகிறது. அதனால் நிஷூகுப்தாவை போலீஸார் தேடிவந்தனர்.
 
இந்நிலையில்  மாயமான அப்பெண் உடலில் பல காயங்களுடன் நேற்று முந்தினம் மீட்கப்பட்டார். உடலில் கடித்துவைத்த அடையாளங்களும் இருந்தன. பின்னர் அவரை மருத்துவர் சோதனை செய்யபிறகு அவருக்கு உடலில் போதை ஊசி போட்டு மயக்கமடையச் செய்து , தொடர்ந்து 10 நாட்களாக வன்புணர்வு செய்தது தெரியவந்தது.அப்பெண்ணை கடித்துவைத்தும் ,சித்ரவதை செய்துள்ளனர்.
 
இதுகுறித்து போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்த போது, நிஷூகுப்தா தன்னை கற்பழித்ததாக அவர் கூறினார். மேலும் இளம்பெண்ணுக்கு நிஷூகுப்தா அறையில் ந்தித்த போது, தண்ணீர் கொடுத்ததும் மயங்கி விட்டார். அதன்பிறகு தான் நிஷூகுப்தா அவரை கற்பழித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments