Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் முன்னிலையில் குடுமிப்புடி சண்டை போட்ட பெண் ஆசிரியைகள்..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (17:36 IST)
பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் இரண்டு பெண் ஆசிரியைகள் குடுமிபிடி சண்டை போட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
பீகார் மாநிலத்தில் உள்ள பிஹ்தா என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு பெண்ஆசிரியர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். வகுப்பறையின் ஜன்னல் கதவுகளை மூடுவது தொடர்பாக இந்த இரண்டு பெண் ஆசிரியர்களுக்கு இடையே சண்டை வந்ததாக தெரிகிறது. 
 
முதலில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் குடுமிப்புடி சண்டை போட்டனர் என்பதும் ஒருவருக்கு ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆசிரியர்கள் இருவரும் தரையில் விழுந்து புரண்டு கட்டி புரண்டு சண்டை போட்டதால் அதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சண்டை போட்ட இரண்டு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments