Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 ஆண்டுகளுக்கு காங்கிரஸில் முதல்வர் சண்டை தொடரும் -முன்னாள் அமைச்சர்

karnataka
, புதன், 17 மே 2023 (19:46 IST)
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல்  கடந்த 10 ஆம்  தேதி நடைபெற்ற நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி  நடைபெற்றது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135  இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

எனவே, காங்கிரஸ் 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இன்னும் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது.

முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
இந்த நிலையில்,  முதல்வர் பதவிக்கான சண்டை காங்கிரஸ் கட்சியில் அடுத்த  ஆண்டுகளுக்கு தொடரும் என்று பாஜக முன்னாள் அமைச்சர் அரசு ஞானேந்திரா இன்று பேட்டியளித்துள்ளார்.

அதில்,  ’’ காங்கிரஸ் ஒரு வேலையில்லாத கட்சி. அக்கட்சியில் முதல்வர் பதவிக்கான போட்டி அடுத்த  5 ஆண்டுகளுக்குத் தொடரும். அக்கட்சியில் உள்ள அனைத்து சாதிப்பிரிவினரும் முதல்வர் பதவி வேண்டுமென்று கேட்டுவருகின்றனர். இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம்’’  என்று தெரிவித்தார்.

மேலும், ’’அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வர் சண்டை  நடைபெறும் என்பதால் அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை; டெல்லிக்குச் சென்றாலும் அவர்களின் சந்தை தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோழியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல்!