Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் ஏற்கனவே வாங்கிய 50 கோடி ரூபாய் கடன் எங்கே? டீக்கடைக் காரரை அதிர வைத்த வங்கி!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (14:36 IST)
ஹர்யானா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற தேநீர்க் கடை உரிமையாளர் வங்கியில் கடனுக்கு சென்ற போது அவர் பெயரில் ஏற்கனவே 50 கோடி ரூபாய் கடன் இருப்பதாக சொல்லி அதிரவைத்துள்ளனர்.

கொரோனா பேரிடர் காரணமாக இந்தியா முழுவதும் சிறு மற்றும் குறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் வியாபாரத்தைத் தொடர வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா என்ற பகுதியில் தெருவில் டீக்கடை வைத்திருக்கும் ராஜ்குமார் அங்குள்ள வங்கிக்கு கடன் கேட்டு விண்னப்பித்துள்ளார். ஆனால் அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கேள்வி எழுப்பிய போது ”ஏற்கனவே வாங்கியுள்ள 50 கோடி நிலுவையில் உள்ள நிலையில், இந்த கடனை எப்படி கட்டுவீர்கள்...?” என்று கேட்டுள்ளனர். இதைக்கேட்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் ’நானே தெருவில் டீக்கடை வைத்திருக்கிறேன். நான் எப்படி 50 கோடி ரூபாய் கடன் வாங்கமுடியும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments