Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 வார உச்சத்தை அடைந்த டாடா கன்சல்டன்ஸி: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:04 IST)
52 வார உச்சத்தை அடைந்த டாடா கன்சல்டன்ஸி: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி பங்குகள் இன்று 52 வார உச்சத்தை அடைந்துள்ளது
 
டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அதில் நிறுவனத்தின் லாபம் 7.17 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை அறிந்ததும் இந்நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டு கொண்டு முதலீட்டாளர்கள் வாங்கினர். இதனால் 3,5 சதவிகிதம் இந்நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கின் விலை 3230 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் இந்த காலாண்டின் லாபம் 8727 கோடி என்றும், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான லாபம் 7504 கோடியாக மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் மட்டுமின்றி இன்போசிஸ், ஹெச்.சி.,எல், விப்ரோ, டெக் மஹேந்திரா உள்ளிட்ட  நிறுவனங்களின் பங்குகளும் இன்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments