Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர் இந்தியாவின் 100% பங்குகளை வாங்க டாடா தீவிரம்!

ஏர் இந்தியாவின் 100% பங்குகளை வாங்க டாடா தீவிரம்!
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (07:52 IST)
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்த நிலையில் இதற்கான ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ள நிலையில் டாடா குழுமமும் தனது ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது 
 
நேற்று வெளியான தகவலின்படி டாடா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை 100 சதவீதம் முழுமையாக வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாகவே டாடா நிறுவனம் தங்களுக்கு சொந்தமாக ஒரு விமான நிறுவனத்தை வாங்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முயற்சியின் பலனாக ஏர் இந்தியா நிறுவனம் டாடா குடும்பத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னமா? பரபரப்பு தகவல்