Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் – அதற்கு முந்தைய நாள் விற்பனை இவ்வளவா ?

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (10:31 IST)
சனிக்கிழமை ஒருநாளில் மட்டும் 220 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஊரடங்கை மக்கள் செயல்படுத்தினர். அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்தன. ஏற்கனவே டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட நிலையில் நேற்று மட்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக்கை மூடுவதாக அறிவித்ததை அடுத்து ’குடி’மகன்கள் முதள் நாளே கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் நேற்று முன் தினம் மட்டும் தமிழகத்தில் 220 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.சாதாரண நாட்களில் ₹70 முதல் ₹100 கோடி வரையிலும், சனி, ஞாயிறு போன்ற வாரவிடுமுறை நாட்களில் ₹120 முதல் ₹135 கோடி வரையிலும் மதுவிற்பனை நடைபெறும். ஆனால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 3 மடங்கு மது விற்பனை ஆகியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments