Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறவினர்கள் அணுகினால் ஜாமீன்: ஆந்திரா போலீசார் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (18:29 IST)
செம்மரம் கடத்த சென்றதாக ஆந்திரா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களின் உறவினர்கள் அணுகினால் ஜாமீன் வழங்கபடும் என ஆந்திரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடிக்கு லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அதனை மடக்கி போலீசார் சோதனை செய்துள்ளனர். அந்த லாரியில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 84 பேர் இருந்துள்ளனர். அவர்களை போலீசார் செம்மரம் கடத்த வந்ததாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட தமிழர்கள் நாங்கள் கூலி வேலை செய்யவதற்காக அந்த லாரியில் வந்ததாக கூறுகின்றனர்.
  
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை ஆந்திர போலீசார் வட்டாட்சியரிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாகவும். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அணுகினால் ஜாமீன் வழங்கபடும் என ஆந்திரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments