Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்முவில் தொடங்குவார்களா தமிழக தொழிலதிபர்கள்?

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (21:46 IST)
ஜம்முவில் தொடங்குவார்களா தமிழக தொழிலதிபர்கள்?
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சமீபத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்பதும் 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  இந்தியாவை சேர்ந்த பிற மாநிலங்களில் உள்ளவர்கள் இடம் வாங்கலாம் என்பதும் தொழில் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொழில் தொடங்க ஏற்ற சூழ்நிலை தற்போது இருப்பதாகவும் தமிழகத் தொழிலதிபர்கள் ஜம்மு-காஷ்மீரில் தொழில் தொடங்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் 
 
இதனையடுத்து இன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ஜம்முவில் தகவல் - தொழில் நுட்பம், விவசாயம், தோட்டக்கலை, கல்வி, சுற்றுலா மேம்பாடு, உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் துவங்க, அதிக வாய்ப்பு உள்ளதாக கேவல் குமார் ஷர்மா பட்டியலிட்டார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments