Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாஜ் ஹோட்டல் தாக்குதல் வழக்கு. தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி..!

தாஜ் ஹோட்டல் தாக்குதல் வழக்கு. தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி..!

Siva

, ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (09:28 IST)
மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைதான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணாவை விசாரணைக்காக இந்திய அரசிடம் ஒப்படைக்க அமெரிக்காவின் கலிபோனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசின்  கோரிக்கையை தொடர்ந்து அமெரிக்க அரசு, அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த அனுமதி அளித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் ராணா வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்தியாவுக்கு  தஹாவூர்   ராணாவை நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்