Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வருடத்துக்கும் மேலாக லண்டனில் வசிக்கும் அனுஷ்கா சர்மா… லண்டனில் குடியேறுகிறாரா கோலி?

Advertiesment
ஒரு வருடத்துக்கும் மேலாக லண்டனில் வசிக்கும் அனுஷ்கா சர்மா… லண்டனில் குடியேறுகிறாரா கோலி?

vinoth

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (10:18 IST)
சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வை அறிவித்துவிட்டார். தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் ஐபிஎல் ஆகியவைதான் அவரின் பிரதான இலக்காக உள்ளன. தற்போது 35 வயதாகும் கோலி தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சகட்ட பார்மில் உள்ளார். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர்தான் அதிக ரன்கள் சேர்த்த வீரராக இருக்கிறார். இந்நிலையில் அவரின் ஓய்வு பற்றி அடிக்கடி பேச்சு எழுகிறது.

இதுபற்றி சில மாதங்களுக்கு முன்னர் பேசிய கோலி “ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர் பயணத்தில் கண்டிப்பாக முடிவு இருக்கும். என்னால் கடைசி வரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது. நான் எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய முழு ஆற்றலையும் நான் காட்ட விரும்புகிறேன். நான் ஓய்வை அறிவித்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு என்னை நீங்கள் காண முடியாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஓய்வுக்குப் பின்னர் கோலி மற்றும் அனுஷ்கா தங்கள் குழந்தைகளோடு லண்டனில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அனுஷ்கா தனது இரு குழந்தைகளோடு லண்டனில் ஒரு ஆண்டாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கோலி லண்டன் சென்று வருகிறார். மேலும் லண்டனில் மிகப்பெரிய அளவில் கோலி முதலீடுகள் செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் போட்டிகள்… பிசிசிஐ எடுக்கும் அதிரடி முடிவு!