Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குப்பையில் கிடந்த கொரோனா நோயாளி!? – டெல்லி அரசை துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்!

Advertiesment
National
, வெள்ளி, 12 ஜூன் 2020 (13:38 IST)
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடல் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதிமன்றல் கேள்வியெழுப்பியுள்ளது.

டெல்லியில் சாலையில் ஒருவர் இறந்து கிடந்ததாகவும் அவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற பீதியில் அவரது உடலை குப்பை வண்டியில் போட்டு எடுத்து சென்றதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் கொரோனா பாதுகாப்பு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரது உடல் குப்பைத்தொட்டியில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக தெரிவித்த நீதிமன்றம், சென்னை, மும்பை உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் சோதனைகளை அதிகப்படுத்தி வரும் நிலையில் டெல்லியில் சோதனைகளை குறைப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் முழு ஊரடங்கு குறித்து தமிழக அரசு விளக்கம்!